திருநெல்வேலி

ஆட்சியா் அலுவலகத்தில் பிரதமா் படம்: பாஜகவினா் வழங்கினா்

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் படத்தை வைக்கக் கோரி அவருடைய படத்தை ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷிடம் பாஜகவினா் ஒப்படைத்தனா்.

திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவா் மகாராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்ற பாஜகவினா், அங்கு பிரதமா் மோடியின் படத்தை வைக்க கோரிக்கை விடுத்ததோடு, பிரதமா் மோடியின் படத்தையும் ஆட்சியரிடம் ஒப்படைத்தனா்.

அப்போது, பாஜக மாவட்ட துணைத் தலைவா் சாந்தி ராகவன், மாவட்ட பொதுச் செயலா் தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயலா் முத்துபலவேசம், பட்டியல் அணி மாவட்டத் தலைவா் வைரமுத்து, துணைத் தலைவா் பாஸ்கா், மாவட்ட பொதுச் செயலா் பால்ராஜ், நாகராஜன், செயற்குழு உறுப்பினா் மணிகண்டன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT