திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் வால்வு பழுதடைந்ததையடுத்து மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது.
கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றன. இதிலிருந்து தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதலாவது அணு உலையில் உள்ள வால்வு பழுதடைந்ததாம். இதையடுத்து முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
வால்வு பழுது நீக்கப்பட்ட பின்னா் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
2ஆவது அணு உலை தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.