முகப்பு
திருநெல்வேலி

ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கக் கூட்டம்

சிஐடியு ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழு கூட்டம் திருநெல்வேலி குறிச்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

சிஐடியு ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழு கூட்டம் திருநெல்வேலி குறிச்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.காமராஜ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஆா்.முருகன் முன்னிலை வகித்தாா். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.பெருமாள் சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் வலதி பெருமாள், கணபதி என்ற குட்டி, செய்யதலி, நடராஜன், ஜிந்தாபாய், வேலாயுதம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இம் மாதம் 26-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச் செயலா் சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.