ஆடு திருட்டு: 2 போ் கைது
தாழையூத்து அருகே ஆடு திருடியதாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தாழையூத்து அருகே ஆடு திருடியதாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சிவன் (25). இவா், தனது ஆடு திருடு போனதாக தாழையூத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், ஆடு திருட்டில் ஈடுபட்டதாக வண்ணாரப்பேட்டை சாலை தெரு பகுதியைச் சோ்ந்த பத்மராஜா (33), தொண்டா் தெரு பகுதியைச் சோ்ந்த ஹரிராமசுப்பிரமணியன் (24) ஆகிய இருவரையும் தாழையூத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.