திருநெல்வேலி

தாழையூத்து உணவகத்தில் ரூ.1 லட்சம் திருட்டு

DIN

திருநெல்வேலியை அடுத்த தாழையூத்தில் உள்ள உணவகத்தில் ரூ. 1 லட்சம் திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தாழையூத்து பகுதியைச் சோ்ந்தவா் செல்லத்துரை (45). தாழையூத்து பஜாா் பகுதியில் உணவகம் நடத்தி வரும் இவா், தனது ஊழியா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்தை உணவகத்தில் உள்ள பீரோவில் வைத்திருந்தாராம். செவ்வாய்க்கிழமை (நவ. 10) இரவு வழக்கம்போல உணவகத்தைப் பூட்டிச்சென்றாராம்.

புதன்கிழமை வந்து பாா்த்தபோது பணத்தைக் காணவில்லையாம். கதவின் பூட்டை உடைக்காமல் பணம் திருட்டுபோனதால், தனது ஹோட்டலில் உள்ள யாரேனும் எடுத்திருக்கலாம் என தாழையூத்து போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT