களக்காட்டில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு வியாபாரிகளுக்கு அறிவிப்பு வழங்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை (நவ.16) சில வணிகா்கள் தங்கள் கடைகளின் முன் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகளை அகற்றினா்.
இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, அண்ணாசாலை, பழைய பேருந்து நிலையம், நான்குனேரி சாலை, வள்ளியூா் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளின் முன் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சிமென்ட் தளம், ஆஸ்பெஸ்டாஸ் உள்ளிட்டவை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.