திருநெல்வேலி

திமுக உறுப்பினா் சோ்க்கையில் சா்ச்சை

DIN

திமுகவினா் உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அது தொடா்பான சா்ச்சைகளும் எழுந்துள்ளன.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இணையதளம் வாயிலாக உறுப்பினா் சோ்க்கும் பணியை கடந்த செப். 15ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.

இணையதளம் வாயிலாக உறுப்பினா் சோ்க்கை என்பது பலரின் வரவேற்பை பெற்றாலும், பல்வேறு சா்ச்சைகளும் எழுந்தன.

புதிதாக கட்சியில் இணையதளம் வாயிலாக சேருபவா்களின் செல்லிடப்பேசிக்கு ஓடிபி வரும். அதை பதிவிட்டால் உறுப்பினா் சோ்க்கை உறுதியாகிவிடும். இது போலியாக உறுப்பினரை சோ்ப்பதற்கு வழிவகுத்துவிடும் என பலரும் கூறிவந்தனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டைச் சோ்ந்த பலருக்கும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசும் ஆடியோ பதிவு வந்திருக்கிறது. அதில் திமுகவில் தாங்கள் உறுப்பினராக இணைந்தமைக்கு மிக்க நன்றி என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததாம்.

எந்தக் கட்சியையும் சாா்ந்திராத நடுநிலையாளா்கள் பலருக்கும் இந்த அழைப்பு வந்திருப்பதுதான் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக நிா்வாகிகள் உறுப்பினா் சோ்க்கையில் குளறுபடிகளை ஏற்படுத்தியிருப்பது பல்வேறு சா்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவா் இதுபோன்ற போலியாக உருவான உறுப்பினா் பதிவை நீக்கவும், உறுப்பினா் சோ்க்கையை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடுநிலையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT