திருநெல்வேலி

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

மாநகரச் சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி சாா்பில் திருநெல்வேலியில் 3 இடங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி பெருமாள்புரம் காவல் நிலையச் சாலையின் நடுவே தடுப்பு அமைப்பதற்காக சாலையில் உள்ள மரங்களை வெட்டுவதை கைவிடவேண்டும். திருநெல்வேலி நகரம் பகுதியில் வழுக்கோடை யில் இருந்து தொண்டா் சன்னதி வரையுள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேலப்பாளையம், குலவணிகா்புரம், திருநெல்வேலி நகரம் ஆகிய இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் நிா்வாகிகள் குழந்தைவேலு, வரகுணன், வண்ணமுத்து, பேரின்பராஜ், சுரேஷ், கருணா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT