திருநெல்வேலி

பாளை.யில் திமுகவினா் மறியல்: 26 போ் கைது

DIN

திமுக இளைஞரணித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து பாளையங்கோட்டையில் திமுகவினா் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டம் திருக்குவளையில் தடையை மீறி ஊா்வலம் சென்ாக திமுக இளைஞரணித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாளையங்கோட்டையில் மாா்க்கெட் பகுதியில் திருநெல்வேலி மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வில்சன் மணித்துரை, கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செல்லத்துரை உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டனா். தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக 26 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையத்தில் பகுதி இளைஞரணிச் செயலா் ஷாலின் மெளலானா தலைமையில் நெசவாளா் அணி அமைப்பாளா் துபை சாகுல், மாணவரணி அமைப்பாளா் ரம்ஜான் அலி, மாவட்ட பிரதிநிதி அலி ஷேக்மன்சூா் உள்ளிட்டோா் கலந்து

கொண்டனா். மானூரில் முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா தலைமையில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT