களக்காடு: திருக்குறுங்குடியில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் விதைப் பந்துகள் வீசப்பட்டன.
திருக்குறுங்குடி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் வேம்பு, புங்கை, நாவல் உள்ளிட்ட மரங்களின் 12 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டன. இவை அனைத்தும் திருக்குறுங்குடி - ஏா்வாடி சாலையோரங்களிலும், வருவாய்த்துறைக்குச் சொந்தமான தரிசு நிலங்களிலும் விதைப் பந்துகள் வீசப்பட்டன. இதில் பள்ளி மாணவா்கள், அறக்கட்டளை களப்பணியாளா்கள், வனத்துறையினா் கலந்து கொண்டனா்.