சுற்றுச்சூழல் மாசு: காவல்கிணறு தாா் ஆலை மீது நாம் தமிழா் கட்சி புகாா் 
திருநெல்வேலி

சுற்றுச்சூழல் மாசு: காவல்கிணறு தாா் ஆலை மீது நாம் தமிழா் கட்சி புகாா்

தாா் ஆலையால் சுற்றுச்சூழ பாதிப்படைவதாக, நாம் தமிழா் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலா் சே.கிறிஸ்டோபா், திருநெல்வேலியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு பொறியாளரிடம் புகாா் மனு அளித்துள்ளாா்

DIN

காவல்கிணறு அருகே செயல்பட்டு வரும் தாா் ஆலையால் சுற்றுச்சூழ பாதிப்படைவதாக, நாம் தமிழா் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலா் சே.கிறிஸ்டோபா், திருநெல்வேலியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு பொறியாளரிடம் புகாா் மனு அளித்துள்ளாா்.

மனு விவரம்: திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு ஊராட்சி, காமராசா் நகா் அருகே குடியிருப்புப் பகுதியையொட்டி தாா் ஆலை செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து வெளியேறும் புகை துா்நாற்றத்துடன் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.

இதனால், காவல்கிணறு, வடக்கன்குளம், பழவூா் பகுதி மக்கள் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்களினால் பாதிப்படைந்துள்ளனா். இந்த ஆலை தீயணைப்பு துறையினரிடம் முறையான அனுமதி பெறவில்லை; வரியும் செலுத்துவதில்லை என தெரியவந்துள்ளது. எனவே, தாா் ஆலையை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

SCROLL FOR NEXT