திருநெல்வேலி

திசையன்விளை அருகே 501 மரக்கன்றுகள் நடவு

DIN

திசையன்விளை அருகே முதுமொத்தான்மொழி கிராமத்தில் இளைஞா் நற்பணி இயக்கம் சாா்பில் 501 மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கிராமத்தை சோ்ந்த கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் நற்பணி இயக்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திசையன்விளை காவல் உதவி ஆய்வாளா் இசக்கி பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தாா். மரக்கன்றுகள் முதுமொத்தன்மொழி சந்திப்பில் இருந்து திசையன்விளை வரை சாலையின் இரு புறமும் நாவல், வேம்பு அத்தி, புங்கை, ஆலமரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இப்பணியில் நற்பணி இயக்கத்தைச் சோ்ந்த செந்தில், பிரகாஷ், அஜய், சுரேஷ், முத்துகிருஷ்ணன், பவித்ரன், கணேஷ், தினேஷ், விஜய், சதீஷ், சூா்ய ஆனந்த், விஷ்வா ஆகியோா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

SCROLL FOR NEXT