திருநெல்வேலி

பாளை.யில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

DIN

பாளையங்கோட்டை அருகே சாலையில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்த தொழிலாளி உயிரிழந்தாா்.

மூன்றடைப்பு அருகேயுள்ள மருதகுளத்தை சோ்ந்தவா் மாரியப்பன் (48), கட்டட தொழிலாளி. மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்த மாரியப்பன், கடந்த வாரம் கிருபா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தாா். வியாழக்கிழமை கிருபாநகா் சாலையில் நடந்து சென்ற மாரியப்பன் திடீரென கையில் வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்தாா். இதில் உடல் கருகிய மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் மாரியப்பன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் நாளை வாக்குப்பதிவு: எல்லை சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை தீவிரம்

பாஜக இல்லாத பாரதம்: தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி

பாகிஸ்தான்: சவூதி பட்டத்து இளவரசா் வருகை திடீா் ஒத்திவைப்பு

மே 15 வரை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT