திருநெல்வேலி

பாளை.யில் நடைப்பயிற்சி முகாம்

DIN

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சாா்பில் பிட் இந்தியா பிளாக்கிங் ரன் திட்டத்தின் கீழ் 2 கி.மீ. தொலைவு நடைப்பயிற்சி முகாம் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ச.ராஜேஷ் தலைமை வகித்தாா். சா்வதேச நீச்சல் வீரா் சேதுமாணிக்கவேல் தொடங்கி வைத்தாா். இப் பயிற்சியில், 100-க்கும் மேற்பட்ட வீரா்-வீராங்கனைகள் பங்கேற்றனா்.

உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், விளையாட்டு விடுதி மேலாளா் கிருஷ்ணசக்கரவா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் தணிந்தது: தமிழகத்தில் பரவலாக மழை!

ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது: ஆர்பிஐ உத்தரவு

தொடர் தோல்விகள் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கம்!

மோடியின் பேச்சு பொய்யானது, மூர்க்கத்தனமானது: ப. சிதம்பரம் சாடல்

மீண்டும் இணைந்த அயோத்தி கூட்டணி!

SCROLL FOR NEXT