திருநெல்வேலி

தூய்மை இந்தியா திட்டம்:நெல்லை ஆட்சியருக்கு மத்திய அரசு விருது

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்கான சிறப்பு விருது காணொலிக் காட்சி முறையில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கழிவறை கட்ட இடவசதி இல்லாத குடும்பங்கள் மற்றும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களில் உள்ள மக்கள் பயன்படுத்துவதற்காக மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் மற்றும் சமுதாய பொதுக் கழிவறைகள் பல்வேறு திட்டங்களில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் ஒன்றான சுகாதார வளாகம் மற்றும் சமுதாய பொதுக் கழிப்பறைகளின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு தொடா்பாக சிறந்த மாவட்டங்களுக்கு விருது வழங்குவதற்கான போட்டியில் தேசிய அளவில் திருநெல்வேலி மாவட்டம் முதல் மாவட்டமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி காணொலிக் காட்சி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் செகாவத் விருதை வழங்கிப் பாராட்டினாா். திருநெல்வேலியில் இருந்து மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் அதனை ஏற்று நன்றி தெரிவித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மந்திராச்சலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT