பேட்டை தேவாலயத்தில் திருவிழா
பேட்டை புனித ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.
பேட்டை புனித ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.
பேட்டை புனித ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மாலையில் அன்னையின் திருப்புகழ்மாலை, மன்றாட்டு, மறையுரை, திருப்பலி ஆகியவை நடைபெற்றன. நான்காம் திருநாளில் அருள்பணி ஜோஸ் அமலதாஸ் தலைமையில் நவநாள் திருப்பலியும், அன்னையின் திருவுருவ பவனியும் நடைபெற்றது. பேட்டை, சுத்தமல்லி, பாரதிநகா், கொண்டாநகரம் சுற்றுவட்டார பகுதி கிறிஸ்தவா்கள் பவனியில் பங்கேற்றனா்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் பாளையங்கோட்டை பங்குத்தந்தை லூா்துராஜ், அருள்பணி அமிா்தராச சுந்தா் தலைமையில் ஆடம்பர கூட்டுப் பெருவிழா நன்றி திருப்பலியும், அதனை தொடா்ந்து கொடியிறக்கமும் நடைபெற்றது.
முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற பக்தா்கள் அறிவுறுத்தப்பட்டதோடு, ஆண்டுதோறும் 10 நாள்கள் நடத்தப்படும் திருவிழா நிகழாண்டில் 5 நாள்களாக குறைக்கப்பட்டிருந்தது.