திருநெல்வேலி

பாளை. மத்திய சிறை முன்பு சிபிஐ அதிகாரியாக நடித்த பெண்

DIN

பாளையங்கோட்டை மத்திய சிறை முன்பு சிபிஐ அதிகாரியாக நடித்த பெண்ணை போலீஸாா் அழைத்துச் சென்று விசாரித்தனா்.

பாளையங்கோட்டை மத்திய சிறைச் சாலையின் முன்பு, சுமாா் 35 வயது இளம்பெண் ஒருவா், தான் சிபிஐ அதிகாரி என சிறைச் சாலை வாசலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த சிறைக்காவலா்களிடம் தெரிவித்தாராம். இதில், சந்தேகமடைந்த சிறைக் காவலா்கள் பெருமாள்புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

பெருமாள்புரம் போலீஸாா் மத்திய சிறைக்கு வந்து அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா் நாகா்கோவிலைச் சோ்ந்தவா் என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது உறவினா்களை வர வழைத்து, அவா்களிடம் அப்பெண்ணை ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT