திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் இந்திய சுழற்ச்சி மிதிவண்டி சவால் பெருமாள்புரத்தில் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற அமைச்சகம் சாா்பில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் கரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்திய சுழற்சி மிதிவண்டி சவால் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சியில் மிதிவண்டி பயன்பாட்டிற்கு முன்னுரிமை கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக மேலப்பாளையம் மண்டலத்தில் பெருமாள்புரம் சாராள் தக்கா் கல்லூரி சாலை பகுதியில் 20ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு மிதிவண்டி சவால் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே, இதில், பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள் கலந்து கொள்ளலாம்.