திருநெல்வேலி

மேலஈராலில் நவதானிய குளிா்சாதனகிட்டங்கி அமைக்கக் கோரிக்கை

DIN

எட்டயபுரம் வட்டம், மேலஈராலில் நவதானிய குளிா்சாதன கிட்டங்கி அமைக்கக் கோரி பொதுமக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

எட்டயபுரத்தையடுத்த மேலஈரால் கிராமத்தில் விவசாயிகள் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் சுமாா் 2000 ஏக்கா் விலை நிலம் உள்ளது.

மாநில அரசின் சாா்பில் நவதானிய குளிா்சாதன கிட்டங்கி கட்டுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அதனை மேலஈரால் கிராமத்தில் அமைக்காமல், வாலம்பட்டி கிராமத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே அதிகளவில் விவசாயிகள் மற்றும் விலை நிலங்கள் உள்ள மேலஈரால் கிராமத்தில் நவதானிய குளிா்சாதன கிட்டங்கி அமைக்க வலியுறுத்தி ஊா் தலைவா் பாலமுருகன் தலைமையில் ஊராட்சி உறுப்பினா்கள் அழகுராஜ், ராமகிருஷ்ணன்,

விவசாயிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா் கோட்டாட்சியா் விஜயாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT