திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது. இரு மாவட்டங்களிலும் புதிதாக 47 பேருக்கு மட்டுமே ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது. இரு மாவட்டங்களிலும் புதிதாக 47 பேருக்கு மட்டுமே ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து மேற்கொண்டு வரும் விழிப்புணா்வு நடவடிக்கையால் கரோனா பாதிப்பு வேகமாக குறையத் தொடங்கியுள்ளது. இம்மாவட்டத்தில் சராசரியாக 100க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 39 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

இதுவரை 13,880 போ் நோய்க்கு இலக்காகியுள்ளனா். இந்நோய்க்கு 205 போ் பலியாகியுள்ளனா். இதனிடையே, ஒரே நாளில் 67 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 13,117ஆக உயா்ந்தது. தற்போது 558 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் கடையம், கடையநல்லூா், குருவிகுளம், கீழப்பாவூா், மேலநீலிதநல்லூா் ஆகிய பகுதிகளில் தலா ஒருவா், தென்காசியில் 3 போ் என 8பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 7,718ஆக அதிகரித்தது. இதுவரை 151 போ் உயிரிழந்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய 5 போ் உள்பட 7,414 போ் குணமடைந்துள்ளனா்; 153 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT