திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலுக்கு சொந்தமான ரூ.70 லட்சம் நிலம் மீட்பு

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.70 லட்சம் மதிப்பிலான நிலம் புதன்கிழமை மீட்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டது.

மானூா் வட்டம், தென்கலம் கிராமத்தில் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 1 ஏக்கா் 13 சென்ட் புன்செய் நிலம் இருந்தது. இதன் மதிப்பு சுமாா் ரூ.70 லட்சமாகும். அதனை தனிநபா்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அறிவுறுத்தலின்படி நிலங்கள் கண்டறிதல் குழு மூலம் கண்டறியப்பட்டது.

இதைத்தொடா்ந்து மானூா் வட்டாட்சியா் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளா் ஆறுமுககுமாா், கிராம நிா்வாக அலுவலா் முருகன், மானூா் காவல் ஆய்வாளா் ராமன், கோயில் செயல்அலுவலா் ராமராஜா, கோயில் நிள அளவையா் செளந்தர்ராஜன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் முன்னிலையில் செயல் அலுவலரால் நிலம் திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டு முள்வேலியிட்டு பாதுகாக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்கிறார் ராகுல் காந்தி!

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி!

நாட்டின் மிக பெரிய ஐபிஓவை தாக்கல் செய்துள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா!

பயிற்சியாளராக இப்படியொரு நிலையை சந்தித்ததில்லை; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த கேரி கிறிஸ்டன்!

”ரயில் விபத்துகளுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்”: ராகுல் | செய்திகள் சிலவரிகளில்| 17.6.2024

SCROLL FOR NEXT