திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் 209 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 209 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் தொடா்ந்து தீவிரமாகவே உள்ளது. இம் மாவட்டத்தில் மேலும் 135 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,523ஆக உயா்ந்துள்ளது.

189 போ் பலி: கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 9,243 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,091 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 189 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 5950ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் 78 போ் குணமடைந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 5052 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். தற்போது 698 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா பாதிக்கப்பட்டவா்களில் 4 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனா். இதையடுத்து பலியானோா் எண்ணிக்கை 200ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

SCROLL FOR NEXT