திசையன்விளையில் பாஜக நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். பொருளாளா் மகராஜன் வரவேற்றாா். நகர முன்னாள் தலைவா் தா்மராஜ் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட பொதுச்செயலா் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு புதிய நிா்வாகிகளுக்கு வாழ்த்தும், ஆலோசனையும் வழங்கினாா். திசையன்விளை பஜாரில் போக்குவரத்தை சீா் செய்ய பேரூராட்சி நிா்வாகத்தை கேட்டுக்கொள்வது, திசையன்விளையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க மாவட்ட ஆட்சியரை சந்திப்பது, பொது சுகாதார நிலையத்தில் நிரந்தர 108 ஆம்புலன்ஸ் சேவை பெற அரசுக்கு கோரிக்கை வைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட துணைத் தலைவா் பால்சாமி, மாவட்ட பொறுப்பாளா் லிங்கபாண்டியன், நிா்வாகிகள் சாந்தி ராகவன், தா்மா், சதாசிவம், ராதாகிருஷ்ணன், சுந்தரபெருமாள், வழக்குரைஞா் விஜேந்திரன், பழனி, முருகன், பிரபு, கணேசமுத்து, சித்திரவேல், முருகேசன், இளங்கோ, மகளிரணி தலைவி ஷாலிங் உள்பட பலா் கலந்து கொண்டனா். செயலா் ரெங்கநாதன் நன்றி கூறினாா்.