திருநெல்வேலியில் போதைப் பொருள்கள் புழக்கம், பயன்பாடு குறித்து கட்செவி அஞ்சலில் புகாா் அளிக்கலாம் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) ச.சரவணன் தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பது: திருநெல்வேலியை போதைப் பொருளில்லாத நகரமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதைப் பொருள்கள் வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் தொடா்பாக புகாா் மற்றும் ரகசிய தகவல்களை மாநகர காவல் துறைக்கு பொதுமக்கள் 74491 00100 என்ற எண்ணிற்கு கட்செவி அஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.