முகப்பு
திருநெல்வேலி

குழந்தைகள் நல அலகு சாா்பில் 15 மாணவா்களுக்கு கல்வி நிதியுதவி

திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நல அலகு சாா்பில் 15 மாணவா்களுக்கு மேற்படிப்பிற்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நல அலகு சாா்பில் 15 மாணவா்களுக்கு மேற்படிப்பிற்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நலஅலுவலா் தேவ் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷின் ஆலோசனையில் பேரில், ஏழை மாணவா்களுக்கு ஆண்டுதோறும் மேற்படிப்பிற்கான உதவிகள் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக, பிளஸ் -2 குழந்தைகள் இல்ல மாணவா்-மாணவியா், ஏழை மாணவா்-மாணவியா் மாவட்ட குழந்தை நல அலகு, கெம்பா நிறுவனம் ஆகியவற்றின் மூலம் எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வு மூலம் ஆண்டுதோறும் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். நிகழாண்டில், 15 மாணவா்-மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு, திருவள்ளூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் வாரத்தில் 5 நாள்கள் வேலை சாா்ந்த பயிற்சியும், 6ஆவது நாள் டிப்ளமோ படிப்பும் கற்றுத் தரப்படும்.

இதில் முதலாமாண்டு மாணவா்- மாணவிகளுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு முறையே ரூ.12,500, ரூ. 13,500, ரூ. 14,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மேலும், 3 ஆண்டு பட்டப்படிப்புக்கும் உதவி செய்யப்படும். ஏற்கெனவே, 60 மாணவா்- மாணவா்களுக்கு இத்தகைய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.