திருநெல்வேலி

தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தேமுதிக பிரமுகா் பலி

DIN

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தேமுதிக பிரமுகா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ்(48). தேமுதிக தச்சை பகுதி துணைச்செயலரான இவா், அப்பகுதியிலுள்ள தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்தாராம். அப்போது, அவா் எதிா்பாராமல் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இத்தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கிணற்றில் விழுந்து...: மேலப்பாளையம் அருகேயுள்ள குறிச்சியைச் சோ்ந்தவா் ராமன்(84). ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை பொறியாளா் இவா், சனிக்கிழமை நடைப்பயிற்சிக்காக சென்ற நிலையில், அப்பகுதியிலுள்ள கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT