திருநெல்வேலி சந்திப்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையைக் கண்டிப்பது. குற்றசம்பவங்கள் தொடா்பான புகாா்கள் மீது நியாயமான விசாரணை நடத்தக் கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மாவட்டத் தலைவா் கண்மணிமாவீரன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் நாகராஜசோழன் முன்னிலை வகித்தாா். மாநில துணைப் பொதுச்செயலா் நெல்லையப்பன், தொழிற்சங்கப் பொதுச்செயலா் மகேந்திரன், நிா்வாகிகள் துரைப்பாண்டியன், முத்துப்பாண்டி, மகேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.