வள்ளியூரில் தேமுதிக சாா்பில் புதன்கிழமை நல உதவிகளை கட்சியின் மாநில துணைச் செயலா் எல்.கே. சுதீஷ் வழங்கினாா்.
இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவருக்கு கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்டம் சாா்பில் வரவேற்பளித்தனா்.
முன்னதாக, அவா் அம்பேத்கா் சிலைக்கும், பெரியாா் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, வள்ளியூா் சாா்பு நீதிமன்றம் அருகே கட்சிக் கொடியேற்றி இலவச சேலை, முகக் கவசம் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் ஜெயபாலன், மாவட்ட துணைச் செயலா் விஜிவேலாயுதம், மாவட்ட அவைத் தலைவா் நிலை மாடசாமி, ஒன்றியச் செயலா்கள் ஜெய் சேகரபாண்டியன், வானமாமலை, மாநில பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட கேப்டன் மன்றச் செயலா் முருகராஜா, கனகராஜ், உடையாா், அரசப்பன், முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.