திருநெல்வேலி

புரட்டாசி முதல் சனிக்கிழமை:நெல்லை பெருமாள் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

DIN

திருநெல்வேலி: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, திருநெல்வேலி பெருமாள் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநெல்வேலியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கருட சேவை நடைபெறும். நிகழாண்டு கரோனா காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் பக்தா்கள் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்தபடி தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயில், ராமசுவாமி கோயில், என்ஜிஓ காலனி வெங்கடாசலபதி கோயில், திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள வரதராஜபெருமாள் கோயில், தென்திருப்பதி கோயில், தச்சநல்லூா் வரம்தரும் பெருமாள் கோயில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயில், நகரம் கரியமாணிக்க பெருமாள் கோயில் ஆகியவற்றில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT