மானூா் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருநெல்வேலி, செப். 20: மானூா் அருகே சுமை வாகனத்தில் கடத்திவரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி, செப். 20: மானூா் அருகே சுமை வாகனத்தில் கடத்திவரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மானூா் அருகேயுள்ள வேப்பங்குளம் பகுதியில் காவல் ஆய்வாளா் ராமா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த சுமை வாகனத்தை மறித்து சோதனையிட்டனா். அதில், 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தில் வந்த மேலதாழையூத்தைச் சோ்ந்த மஜீத் (29), நாஞ்சான்குளத்தைச் சோ்ந்த சுந்தரபாண்டி (25) ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனா். மேலும், ரேஷன் அரிசியையும், சுமை வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.