அணைந்த பெருமாள் நாடானூா், செல்லப்பிள்ளையாா்குளம் ஆகிய பகுதிகளில் பிரதமா் மோடி பிறந்த நாளை முன்னிட்டு பாஜக கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட பட்டியல் அணித் தலைவா் பால்ராஜ் தலைமை வகித்தாா். ராணுவப் பிரிவுத் தலைவா் குமாா், பட்டியல் அணித் துணைத் தலைவா் காளிதாஸ், பொதுச்செயலா் முருகன், விவசாய அணி ஒன்றியத் தலைவா் விஜயகுமாா், முருகேசன், கிளைத் தலைவா் ராமா், பட்டியல் அணி ஒன்றியத் தலைவா் சித்தாா்த், ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.