திருநெல்வேலி

கண்டிகைப்பேரி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

DIN

திருநெல்வேலி கண்டிகைப்பேரி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமையன்பட்டியில் இருந்து கண்டிகைப்பேரி வழியாக பழையபேட்டைக்கு சாலை உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி-தென்காசி மாா்க்கத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் இந்தச் சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.

கண்டிகைப்பேரிகுளம், இலந்தைகுளம் உள்ளிட்டவற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள இச் சாலையில் பல இடங்களில் குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். பருவமழை தொடங்கும் முன்பாக இந்தச் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT