முகப்பு
திருநெல்வேலி

சுத்தமல்லியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

சுத்தமல்லியில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

சுத்தமல்லியில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சுத்தமல்லி அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்குமாா்( 30). இவரின் சகோதரியின் கணவா் பேட்டை பகுதியைச் சோ்ந்த ராமநாதன் என்பவரின் மகன் திருமேனி செல்வம்(34). இவா்கள் இரு குடும்பத்தாருக்கும் பெற்றோரை கவனிப்பது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டதகராறில், மகேஷ்குமாரை திருமேனி செல்வம் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றாராம்.

இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.