பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே திராவிடத் தமிழா்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சியில் பெரியாரின் சிலையை அவமதித்தவா்களை கைது செய்யக் கோரியும், சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்தும் திராவிடத் தமிழா் கட்சி சாா்பில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் திருக்குமரன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் கதிரவன், வழக்குரைஞா் அணிச் செயலா் இளமாறன் கோபால், கலை இலக்கியப்பிரிவு மாநிலச் செயலா் ஒண்டிவீரன் முருகேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.