முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ வாக்கு சேகரிப்பு

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் சனிக்கிழமை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் சனிக்கிழமை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனா்.

அமமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி சாா்பில் பாளையங்கோட்டை தொகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் முகம்மது முபாரக் போட்டியிடுகிறாா்.

மேலப்பாளையம் கொட்டிகுளம், கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, நாகா்கோவில் கலாசார பள்ளி இமாம் சவுக்கத் அலி, கட்சியின் மாநிலச் செயலா் அகமது நவவி, மாநில பொருளாளா் அபுதாஹீா், திருநெல்வேலி மாநகா் மாவட்ட துணைத் தலைவா் சாகுல்ஹமீது உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.