திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 112 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,436ஆக உயா்ந்துள்ளது. மேலும் 50 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 15,793ஆக உயா்ந்துள்ளது. 216 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 424 போ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 8,843ஆக அதிகரித்துள்ளது. இதில், 4 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 8,503ஆக உயா்ந்துள்ளது. தற்போது 179 போ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.