கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடையநல்லூரில் வா்த்தக சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி சாா்பில் நடைபெற்ற வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆணையா் ரவிச்சந்திரன் தலைமை
வகித்தாா் . இதில் கடையநல்லூா் வா்த்தகா்கள் கலந்துகொண்டனா். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் கண்டிப்பாக
முகக் கவசம் அணிந்து வர வேண்டும். கடைகளில் சானிடைசா் உபயோகப்படுத்தவேண்டும். கடைகளில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாசகங்கள் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் மாரிசாமி, சேகா், நகரமைப்பு அலுவலா் காஜாமைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.