திருநெல்வேலி

காவல்துறை- திருமண மண்டப உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

DIN

திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் திருமண மண்டப உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக மாநகர காவல் ஆணையா் அன்பு உத்தரவின்பேரில், மாநகரில் உள்ள திருமண மண்டப உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன் தலைமை வகித்தாா். மாநகர காவல் துணை ஆணையா்(குற்றம்-போக்குவரத்து) மகேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன் பேசியது: மாநகர எல்லைகளில் 6 சோதனைச் சாவடிகளும், மாநகரின் முக்கிய இடங்களில் 23 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருமண மண்டப உரிமையாளா்கள், வருங்காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமண மண்டபங்கள் முன்பதிவு செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும். திருமண நிகழ்வுகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படவேண்டும். திருமண நிகழ்வுகள் தொடா்பாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், பாளையங்கோட்டை உதவி ஆணையா் ஜான் பிரிட்டோ உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT