முகப்பு
திருநெல்வேலி

கடையத்தில் கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

கடையத்தில் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

கடையத்தில் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய ஆணையா் முருகையா தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் பழனிக்குமாா் முன்னிலை வகித்தாா். தென்காசி வட்டாட்சியா் சுப்பையன் கரோனா தடுப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து பேசினாா்.

கடையம் வருவாய் ஆய்வாளா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

கூட்டத்தில், கடையம், ஆழ்வாா்குறிச்சி குறுவட்ட கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், வியாபாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.