முகப்பு
உலகம்

நேபாளம்: சாலை விபத்தில் இரண்டு இந்தியர்கள் பலி

காத்மாண்டுவில் பயணிகள் பேருந்து மோதியதில் இரண்டு இந்தியர்கள் சனிக்கிழமை பலியாகினர்.

Updated On : 21 மார்ச், 2026 at 12:29 PM
விபத்து
பகிர்:

காத்மாண்டுவில் பயணிகள் பேருந்து மோதியதில் இரண்டு இந்தியர்கள் சனிக்கிழமை பலியாகினர்.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பணிபுரிந்து வந்த இந்தியர்களான பதம் உபாத்யாய், சதீஷ் குமார் குஷ்வாஹா ஆகியோர், வெள்ளிக்கிழமை இரவு காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியான போதேபஹால் பகுதியில் தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தனர்.

பின்னர் அவர்கள் தேசிய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் சனிக்கிழமை அவர்கள் பலியாகினர் என்று காத்மாண்டு பள்ளத்தாக்கு போக்குவரத்து அலுவலகத்தின் துணை காவல் கண்காணிப்பாளரும் செய்தித் தொடர்பாளருமான நரேஷ் ராஜ் சுபேதி தெரிவித்தார்.

இவ்வழக்கில் பேருந்து ஓட்டுநர் மன் பகதூர் பஸ்நெட் (35) கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

summary

Two Indian nationals died on Saturday after a local passenger bus hit them in Nepal's capital, Kathmandu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.