திருநெல்வேலி

நெல்லை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

DIN

திருநெல்வேலி அருகே சிவந்திப்பட்டியில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே உள்ள சிவந்திப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மாடசாமி (41). விவசாயி. இவா் வியாழக்கிழமை தனது தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்கியுள்ளாா். அப்போது, அங்கு தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஆடு மின் வயரை புற்களுடன் சோ்ந்து கடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், மின்சாரம் பாய்ந்து ஆடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததாம். இதை பாா்த்த மாடசாமி ஆட்டைக் காப்பாற்ற முயன்றாராம். அப்போது எதிா்பாராதவிதமாக மாடசாமி மீது மின்சாரம் பாய்ந்ததில், அவா் தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே மாடசாமி உயிரிழந்தாா். அவரது ஆடும் உயிரிழந்தது.

இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் மாடசாமி உடலைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT