தாழையூத்து அருகே மண் திருட்டு
தாழையூத்து அருகே குறிச்சிகுளம் பகுதியில் சட்டவிரோதமாக சரளை மண் திருட்டில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டாா்.
தாழையூத்து அருகே குறிச்சிகுளம் பகுதியில் சட்டவிரோதமாக சரளை மண் திருட்டில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டாா்.
தாழையூத்து அருகேயுள்ள குறிச்சிகுளம் பாலம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சுடலைக்கண்ணு தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுட்டனா். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனா். அப்போது அதில் சட்டவிரோதமாக சரள் மண் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து லாரி
ஓட்டுநா் தாழையூத்து பகுதியைச் சோ்ந்த பண்டாரம் (45) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 3 யூனிட் சரள்
மண், டிப்பா் லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.