முகப்பு
தமிழ்நாடு

நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமியின் மகன் போட்டி!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளது குறித்து...

Updated On : 29 மார்ச், 2026 at 10:35 AM
கிருஷ்ணசாமி - எக்ஸ்
பகிர்:

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஒட்டபிடாரம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இவரின் மகன் ஷியாம் நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனையொட்டி முதல் கட்டமாக 43 வேட்பாளர்களை கிருஷ்ணசாமி இன்று அறிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்ததாகவும், ஆனால், தற்போது தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கிருஷ்ணசாமி கூறினார்.

தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான கூட்டணித் தொகுதிப் பங்கீடுகள் திமுக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிகளிகளிடையே முடிவடைந்துள்ளன.

தற்போது அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தனது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக இன்று தெரிவித்தார். முதல் கட்டமாக 43 வேட்பாளர்களையும் இன்று அறிவித்தார்.

இதன்படி கிருஷ்ணசாமி ஒட்டபிடாரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார். இவரின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் என இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.

இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

summary

Krishnasamy son shiyam to Contest in Nellai and Srivilliputhur Constituencies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.