நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமியின் மகன் போட்டி!
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளது குறித்து...
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஒட்டபிடாரம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இவரின் மகன் ஷியாம் நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனையொட்டி முதல் கட்டமாக 43 வேட்பாளர்களை கிருஷ்ணசாமி இன்று (மார்ச் 29) அறிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்ததாகவும், ஆனால், தற்போது தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கிருஷ்ணசாமி கூறினார்.
Advertisement
Advertisement
தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான கூட்டணித் தொகுதிப் பங்கீடுகள் திமுக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிகளிடையே முடிவடைந்துள்ளன.
தற்போது அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தனது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார். முதல் கட்டமாக 43 வேட்பாளர்களையும் இன்று இன்று (மார்ச் 29) அறிவித்தார்.
இதன்படி, கிருஷ்ணசாமி ஒட்டபிடாரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார். இவரின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் என இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி, 60 - 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிருஷ்ணசாமி பேசியதாவது:
''அதிமுகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினேன். தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 3 பேரவைத் தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தேன்.
9 இடங்களில் அதிமுகவுக்கு டெபாசிட் இல்லை, கன்னியாகுமரியில் 4% வாக்குகளை மட்டுமே பெற்றது. ஏன் கூட்டணி அமைக்கவில்லை என்பது இபிஎஸ்ஸுக்குத்தான் தெரியும்.
எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பிறகே தனித்துப் போட்டியிடும் முடிவை புதிய தமிழகம் எடுத்தது. புதிய தமிழகம் கட்சி 60 - 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும்'' என கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.
Krishnasamy son shiyam to Contest in Nellai and Srivilliputhur Constituencies
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.