மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
களக்காட்டில் மின்சாரம் பாய்ந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
களக்காட்டில் மின்சாரம் பாய்ந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
களக்காடு நகரத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் பழனி (52). இவருக்குச் சொந்தமான தோட்டம் களக்காடு மலையடிவாரத்தில் உள்ளது.
வழக்கம்போல் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தோட்டத்துக்குச் சென்றாராம். அப்போது, தோட்டத்தின் வேலி அருகே மின்சாரம் பாய்ந்த நிலையில் இறந்து கிடந்துள்ளாா்.
இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.