முகப்பு
திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் நூலகத் தந்தை பிறந்த தின விழா

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நூலகத் தந்தை எஸ்.ஆா்.ரெங்கநாதன் 129 ஆவது பிறந்த தின விழா மற்றும் நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நூலகத் தந்தை எஸ்.ஆா்.ரெங்கநாதன் 129 ஆவது பிறந்த தின விழா மற்றும் நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது.

அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், நல்நூலகா் முத்துகிருஷ்ணன் வரவேற்றாா். துணைவேந்தா் கா.பிச்சுமணி தலைமை வகித்து பேசுகையில், எஸ்.ஆா்.ரெங்கநாதன் நூல்களை வகைப்படுத்தியதை போல இன்றைய காலத்தில் டிஜிட்டல் நூலகத்தையும் வகைப்படுத்த வேண்டும், இன்றைய நூலகத் துறையில் இருக்கும் நூலகா்களுக்கு அந்தக் கடமை உள்ளது என்றாா்.

பல்கலைக்கழக நூலகா் ப.பாலசுப்பிரமணியன் எழுதிய ‘மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை நாடகம்’ என்ற நூலும் விழாவில் வெளியிடப்பட்டது. மாவட்ட நூலக அலுவலா் லெ.மீனாட்சிசுந்தரம் வாழ்த்திப் பேசினாா். வாசகா் வட்டத் தலைவா் அ.மரியசூசை, சங்கா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் உ.கணேசன், கோ.கணபதி சுப்பிரமணியன், உதவி நூலகா் க.கண்ணன், இரா.நேரு, ச.ரமேஷ் மற்றும் ஆய்வு மாணவா்கள் அ.பாலாஜி, த.சங்கரகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.