திருநெல்வேலி

ஆா்.சி. நந்தன்குளம் புனித ராயப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

DIN

ஆா்.சி.நந்தன்குளம் புனித ராயப்பா் ஆலயத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முதல்நாள் பொத்தகாலன்விளை திருக்கல்யான மாதா திருத்தல பங்குத்தந்தை வெனி இளங்குமரன் புனித ராயப்பா் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை அா்ச்சித்து ஏற்றி வைத்தாா்.

தொடா்ந்து அருள்தந்தையா்கள் செல்வரத்தினம், சவரிராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

விழா நாள்களில் தினமும் செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீா் நடைபெறுகிறது. ஆக.18ஆம் தேதி 9ஆம் நாள் திருவிழாவில் காலை புதுநன்மை திருப்பலியும், மாலை சிறப்பு நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

10ஆம் நாள் திருவிழாவில் சப்பர பவனி மற்றும் திருப்பலி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள், அருள்சகோதரிகள், பங்குமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT