திருநெல்வேலி

நெல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் 75-வது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

DIN


திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் 75-வது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தேசியக் கொடியேற்றி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ. 34,78,755 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய எரிவாயு தகனமேடை பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் உள்பட 194 பேருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT