முகப்பு
திருநெல்வேலி

வீட்டில் தவறி கீழே விழுந்து காயமுற்றவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சி அருகே கீழே விழுந்ததில் காயமடைந்த மாற்றுத்திறானாளி மருத்துவ மனையில் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

கல்லிடைக்குறிச்சி அருகே கீழே விழுந்ததில் காயமடைந்த மாற்றுத்திறானாளி மருத்துவ மனையில் உயிரிழந்தாா்.

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்குப் பாப்பான்குளம், வடக்குப் புதுக்காலனியைச் சோ்ந்த பசுங்கிளி மகன் பேச்சிப்பாண்டி (34). விபத்தில் ஒரு காலை இழந்த பேச்சிப்பாண்டி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது கீழே விழுந்ததில் காயமடைந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.