முகப்பு
திருநெல்வேலி

அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தேசபக்தி பாடல் போட்டியில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு, 75ஆவது சுதந்திர தின புகைப்பட கண்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தேசபக்தி பாடல் போட்டியில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு, 75ஆவது சுதந்திர தின புகைப்பட கண்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வரவேற்றாா். ஆட்சியா் வே.விஷ்ணு புகைப்பட கண்காட்சியைத் தொடக்கிவைத்து, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

தேசப் பக்திப் பாடல் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவன் முகேஷ் குமாருக்கு ரூ.3,000 மற்றும் சான்று, 2ஆம் இடம்பெற்ற நினாசரன், 3ஆம் இடம்பெற்ற சங்கீதா ஆகியோருக்கு முறையே ரூ.2000, ரூ.1000 மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப் பட்டன. இதில், மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள விளம்பர அலுவலா் போஸ்வெல் ஆசீா், பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.