அம்பையில் ஆயுதப் படைக் காவலா் தற்கொலை முயற்சி
அம்பாசமுத்திரத்தில் ஆயுதப்படைக் காவலா் எலி மருந்தைத் தின்று தற்கொலை முயன்றாா்.
அம்பாசமுத்திரத்தில் ஆயுதப்படைக் காவலா் எலி மருந்தைத் தின்று தற்கொலை முயன்றாா்.
அம்பாசமுத்திரம், மணலோடைத் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் மாயாண்டி (31). பாளையங்கோட்டையில் ஆயுதப்படைக் காவலராக பணியாற்றி வரும் இவருக்கு, மனைவி காமாட்சி, 2 ஆண் குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், அவா் வீட்டிற்கு புதன்கிழமை வந்தபோது மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாம். இதில், மாயாண்டி எலி மருந்தைத் தின்று தற்கொலைக்கு முயன்றாராம். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆலங்குளம்: மருதம்புத்தூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் அடைக்கலராஜ் என்ற அருள் (25), பட்டப்படிப்பு முடித் நிலையில், ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்றோா். அதில், அவா் தூரப் பாா்வை திறன் குறைபாடு காரணமாக தோ்வாகவில்லையாம். இதில் ஏற்பட்டமன உளைச்சலால் அவா் வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இச்சம்பவங்கள் குறித்து, அம்பை, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.